Matrix vs Advaita Vedanta
1999 களில் வெளிவந்த matrix படத்தின் கதையானது ஹிந்து தத்துவமரபில் வரும் அத்வைத வேதாந்தத்துடம் ஒத்துப்போகும். படத்தில் AI Machine கள் ஒரு Virtual உலகத்தையும் அதில் மனிதர்களை தனது power source க்காகவும் உருவாக்கும். முழுவதுமே மாயை என்று அறியாவண்ணம் அங்கு உள்ள மனிதர்கள் கணினியின் virtual simulation னால் உருவாக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவார்கள். அதில் வரும் neo என்ற கதாபாத்திரம் கணினியால் உருவாக்கப்பட்ட Virtual உலகத்தில் மனிதர்கள் உழல்கிறார்கள் என்று உண்மையை உணர்ந்து. அந்த Virtual Simulation கட்டுப்படுத்தும் மெஷினை அழித்து அங்கு உள்ள மனிதர்களை எப்படி நிஜ உலகத்திற்க்கு கொண்டு வருகிறார்கள் என்பதே matrix ன் கதை கருவாகும். சங்கரின் அத்வைதத்தின்படி முழுமுதன்மையான பிரம்மம் மட்டும் மெய் மற்றவை எல்லாம் மாயையை என்கிறது. நாம் காணும் பிரபஞ்சம் என்பது பிரமத்திலிருந்து உருவானவை அல்ல மாறாக நமது பிரபஞ்சமே பிரம்மம்தான். நமது புறஉலகம் என்பது உண்மையான ஒன்றுதான். ஆனால் அதன் குணங்கள், சாரங்கள், வடிவங்கள் எல்லாமே மாயை என்கிறது. அத்வைதம் என்பதே இரண்டற்றா நிலையாகும்(Non Duality). அனைத்துமே ஒற்றை ...