Posts

Showing posts from August, 2021

Paganism | பாகனியம்

Image
கிறிஸ்துவம் அல்லது ஆபிரகாமிய(கிறிஸ்துவம், யூதம், இஸ்லாம்) மதங்கள் தவிர அல்லது அவை தோன்றுவதற்கு முன்பாக உலகம் முழுவதுவும் பொதுவாக காணப்பட்ட பலதெய்வ வழிபாட்டு முறையே paganism அல்லது பாகனிய மதம் எனப்படுகிறது. மனிதர்கள் ஆதி காலத்தில் நெருப்பு, நீர், காற்று, இடி, ஆகாயம் என்று இயற்கையை வழிபட்டனர். உதாரணமாக, ஜீயஸ் பண்டைய கிரேக்கத்தில் வானத்தின் (இடி) கடவுள், இந்திரன் - இந்தியர்களில், தரனாக்கள் - செல்ட்களில், ஸ்காண்டிநேவிய மக்களிடையே - தோர், பால்டிக் மத்தியில் - பெர்குனாக்கள், ஸ்லாவ்களிடையே - பெருன்.  பண்டைய கிரேக்கர்களில் சூரியனின் கடவுள், எகிப்தியர்களில் ரா, மற்றும் ஸ்லாவ்களில் டாஸ்பாக். நீரில் நெப்டியூன் கடவுள் நெப்டியூன், இந்தியாவில் - சூரிய பகவான். உலகம் முழவதும் பூர்வகுடிகள் வழிபாடு இயற்கையை கொண்ட பல தெய்வ வழிபாடாக இருந்துருகிறது. என்ன அதன் பெயர்கள் தான் வேறு. பிற்காலத்தில் இயற்கைக்கு மனித வடிவம் கொடுத்து உருவ வழிபாடாக வழிபட்டான். அதேபோன்று நம் ஊர்களில் போரில் இறந்தால் அவ்வீரர்களுக்கு நடுகல் நட்டு வணங்கி வழிபட்டனர். இதுபோன்று உலகம் முழுவதும் உயிரிழந்த வீரர்களுக்கு hero stone அல்லது ஏ...

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் | RSS

Image
நமது பாரத தேசம் மொழி, மாநிலம், இனம், ஜாதி, உட்பிரிவு, சமயம் என்று பல வேற்றுமைகளால் வேறுபட்டு கிடக்கிறது. இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு இந்த சமூகத்தை ஹிந்து(ஹிந்து தேசியம் அல்லது ஹிந்து பண்பாடு) என்ற ஒற்றை அடையாளத்தில் ஒருங்கிணைப்பதே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் முதன்மையான நோக்கமாகும். ஆரிய சமாஜத்தின் கனவுகளையும் காந்தியின் செயல்முறைகளையும் உள்ளடக்கி இந்துமத ஞானமரபினை பாதுகாக்க சங்கமானது 1925 ம் ஆண்டு விஜயதசமி நன்னாளில் கேசவ பலிராம் ஹெட்கேவரால் தொடங்கப்பட்டது.  சங்கமானது சமூகத்தில் நிலவும் தீண்டாமை, ஜாதி மற்றும் வர்ணாசிரம ஏற்றத்தாழ்வுகளை கடுமையாக எதிர்க்கிறது. காலம் கடந்த மனு ஸ்மிருதியை சங்கமானது நிராகரிக்கிறது. ஜாதி ஏற்றத்தாழ்வுகளை களைய சமபந்தி போஜனம் மற்றும் கலப்பு திருமணங்களை ஆதரிக்கிறது. அதேபோல் இம்மண்ணில் தோன்றிய சைவம், வைணவம், சாக்தம், கணாபத்யம், கௌமாரம், சௌரம், பௌத்தம், சமணம் மற்றும் சீக்கிய போன்ற சமய வேற்பாடுகளை களைந்து ஹிந்து என்ற ஒற்றை அடையாளத்தில் சமூகத்தை ஒன்றுணைக்கிறது. உருவ மற்றும் அருவ வழிபாட்டு முறைகளை ஏற்கிறது. சங்கமானது ராமனையோ அல்லது சிவனையே வணங்கினால...

இந்தியா சுதந்திரமும் செங்கோலும்!

Image
வெள்ளையனுக்கு தெரியும் இந்த பூமி ஆன்மிகவாதிகள் நிறைந்த நாடு என்று. அதனால்தான் நமக்கு சுதந்திரம் கொடுக்கும் போது எந்த முறைபடி ஆட்சிமாற்றத்தை தெரிவிப்பது என்று நேருவிடம் கேட்டான். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முதல்நாள் (1947 ஆகஸ்ட் 14) பாகிஸ்தான் இஸ்லாமிய முறைப்படி தனது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டது.  ஆனால் நாத்திகரானா நேருவுக்கு இந்த சடங்கு முறைகள் பற்றி குழப்பமாக இருந்தது மற்றும் இது பற்றி ராஜாஜிடம் அறிவுரை கேட்டார். பொதுவாக ஹிந்து முறைப்படி அரசர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது ராஜகுருவாக இருப்பவர் செங்கோலை புதிய மன்னருக்குக் கொடுத்து ஆட்சி மாற்றத்தை அறிவிப்பார். ராஜாஜியும் இந்த சடங்குகளை செய்வதற்க்கு திருவாடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு டெல்லிக்கு அழைத்தார். 1947 ஆகஸ்ட் 15ம் தேதி அன்று ஹிந்து மரபு படி ராஜகுருவாக திருவாடுதுறை ஆதினம் தலைமையில் ஆளுனர் மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை பெற்று புனித நீர் தெளித்து, ஓதுவார் மூர்த்திகள், வேயிறு தோளிபங்கன் என்று துவங்குகிற தேவார திருப்பதிகத்தைப் பாட, பதினோராவது பாடலின் கடைசி வரி, “அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே...