அய்யா வைகுண்டர்
“தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்” என்று தாழ்த்தப்பட்டவர்களின் சமத்துவத்திற்கு போராடியவர் அய்யா வைகுண்டர். அய்யா அவர்களின் முக்கியமான முழக்கம் ஒரே குலம் ஒரே மதம் ஒரே கடவுள் என்பதாகும். அய்யாவின் ஆன்மிக வழியிலான சுயமரியாதை, சமபந்தி போஜனம், சமத்துவம், தீண்டாமையை எதிர்த்தல் மற்றும் உருவ வழிபாட்டுக்கு பதில் கண்ணாடி வழிபாடு போன்ற சமூக புரட்சிகள் "அய்யா வழி" தரிசனங்களாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மார்க்சிசமும், காந்தியிசமும் முக்கியமான கொள்கைகளாக முளை விடுவதற்கு அதிக நாட்களுக்கு முன்பாகவே நம்முடைய நாட்டில் விதைவிட்ட மகத்தான ஒரு வாழ்வியல் தத்துவ முறை "அய்யா வழி". அய்யா வைகுண்டர் 1809 இல் பொன்னுமாடன் நாடார் வெயிலால் தம்பதியருக்கு மகனாக பிறந்தார் மற்றும் அவருக்கு “முடிசூடும் பெருமாள்” என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் அழகான பெயர்கள் சூட்டா அக்காலத்தில் அவர்ணர்களுக்கு உரிமை இல்லை மற்றும் உயர் சாதியினர்களிடம் இருந்து எதிர்ப்பு வரும் என்ற காரணத்தால் பின் "முத்துக்குட்டி" என்று பெயர் மாற்றப்பட்டது. முத்துக்குட்டி குழந்தை பருவத்தில் இருந்தே ஆன்மிகத்தில் அதிக...