Posts

Showing posts from April, 2022

இந்து ஞான மரபு

Image
இந்து ஞான மரபு என்பது வெறும் சடங்குகள் சம்பிரதாயங்கள் மற்றும் இறை வழிபாட்டை மட்டும் கொண்டதல்ல மாறாக அவை பல தத்துவங்களையும் தரிசனங்களை சிந்தனைகளையும் நீதி நூல்களையும் தன்னகத்தே விவாதித்து உருவானவை. உலகில் வளர்ந்து வந்த நாகரிகங்கள் அனைத்தையும் பகுத்துபார்ப்பதற்கான ஒரு பொதுவான அணுகுமுறை உள்ளது. அந்த முறையில் இந்து ஞான மரபை அணுகினால் எளிதாக புரிந்து கொள்ளலாம்  அதன் அடிப்படைகளை. எந்த ஒரு சமூகத்தின் தொல் பிரதி தொடக்கம் என்பது நாட்டார் பண்பாடாகத்தான் இருக்கும் அதில் இருந்துதான் இலக்கியம் மற்றும் கவிதைத்தன்மை கொண்ட செவ்வியல் இலக்கியங்கள் உருவாகும். அடுத்த படிநிலையில் செவ்வியல் இலக்கியங்கள் மூலம் உருவான கருத்துக்கள் தர்க்கரீதியான விவாததிற்கு உட்பட்டு அவை தத்துவமாக தொகுக்கப்படும். இதன் அடுத்தபடிநிலையில் அந்த தத்துவம் பிற அறிவு துறைகளில் விரிவடைந்து தரிசனமாகிறது. அந்த தரிசனங்கள் உள்ளுணர்வால் விரிவடைந்து ஒரு கட்டத்தில் பெரு மதங்களாகிறது. இதன் முறையே, நாட்டார் பண்பாடு -> செவ்வியல் இலக்கியங்கள் -> தத்துவங்கள் -> தரிசனங்கள் -> மதங்கள் இதே முறையிலே தான் பழமைவாய்ந்த  இந்திய, கிரேக்...

வைதீகம்

Image
இந்தியா ஞான மரபினை வைதீகம், அவைதீகம் என்று இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். வேதங்களை மூல நூலக ஏற்கும் பிரிவு வைதீகம் என்றும். வேதங்களை முற்றிலும் மறுக்கும் தரப்பு அவைதீகம் என்றும் பிரிக்கப்படுகிறது. இதை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும் என்றால் வைதீக மரபின் அடிப்படையான வேதம் உருவான தொடகத்தை புரிந்து கொள்ளவேண்டும். ஒரு சமூகரீதியாக முன்னேறும் இனக்குழுக்களின் தொடக்கப்புள்ளி நாட்டார் பண்பாடாகத்தான் இருக்கா முடியும். இந்த நாட்டார் பண்பாடு என்பது பல சடங்குகள், நம்பிக்கைகள், எளிய பிரார்த்தனை பாடல்கள், சிறு தெய்வ வழிபாடு, பறைகள் போன்ற வாத்திய கலைகள் கொண்டவையாகும். நாட்டார் பண்பாட்டின் அடுத்தகட்டம்தான் செவ்வியல் இலக்கியங்கள். இந்த செவ்வியல் இலக்கியங்கள் என்பது இலக்கியங்கள், பழமொழிகள், புதிர்கள், கவிதைகள் கொண்டவையாகும். அவ்வாறு பல இனக்குழுக்களின் நாட்டார் பண்பாடும் + செவ்வியல் இலக்கியங்களும் சேர்ந்து காணப்படும் ஒரு நூல்தான் வேதமாகும். அவை பல இனக்குழுக்களின் சடங்குளையும் நம்பிக்கைகளையயும் கொண்டவையாகும். அவை நாட்டார் பண்பாட்டை கொண்ட இயற்கையை நோக்கிய எளிய பிரார்த்தனை பாடல்களையும் மற்றும் கவி...