Posts

Showing posts from September, 2021

வைசேஷிகம்

Image
அணுக்களின் சேர்க்கை அல்லது கூட்டு மூலமே இப்பிரபஞ்சமும் அதில் உள்ள எல்லா பொருட்களும் உருவாகின என்பதே வைசேஷிக தத்துவமாகும். இன்றைய நிகழ் உலகில் அணுக்கொள்கையானது அறிவியல் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது. அறிவியலும் அணுக்கள் இணைவு(Nuclear Fusion) மற்றும் அணுக்கள் பிணைவு(Nuclear Fission) மூலமே பொருட்கள் உருவாகுகின்றன என்கிறது. அணுக்களின் கூட்டாக பொருட்களை பார்க்கும் பார்வை பழைய காலம் முதலே இருந்து வந்துள்ளது. கிரேக்க சிந்தனையாளர்கள் எபிகுரஸ்(கிமு 341-271), டெமாகிரிட்டஸ்(கிமு 460-380) போன்றார் அணுக்கொள்கையை பற்றி தங்களது தத்துவங்களை உருவாக்கியுள்ளனர். அதேபோன்று இந்தியா ஞான மரபிலும் வெகு காலம் முன்பே அணுக்கொள்கை பற்றிய கருத்து இருந்திருக்க வேண்டும். அதிலிருந்த இந்த தர்க்கபூர்வமான வைசேஷிக தரிசனம் உருவாகியிருக்க வேண்டும். வைசேஷிகத்தின் மூல குரு கணாதர் என்னும் ரிஷியாகும் மற்றும் இவர் கிமு ஆறாம் நூற்றாண்டிலோ அல்லது கிமு பத்தாம் நூற்றாண்டிலோ வாழ்ந்திருக்கலாம். இதுவும் சாங்கியம் போன்று பௌதிக தரிசனமாகும். வைசேஷிகம் ஒவ்வொரு பொருட்களை பகுத்து பகுத்து பகுப்பாய்வு செய்தால் நுண் அணுக்களே இறுதியில் மிஞ்சு...

யோகம்

Image
இப்போது எல்லாரும் அறிந்த யோகா பயிற்சிகள் கூட இந்த யோகா தரிசனத்தில் இருந்து வந்ததுதான்.  இதுவும் பௌதிக தரிசனமாகும். இந்த யோகா தரிசனமானது சாங்கியதின் கிளையாக பரிணமித்து தனி தரிசனமாக மாறியது. யோகம் சாங்கியதின் மூன்று அடிப்படை கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டது(பிரபஞ்சம் பருப்பொருளால் ஆனது, பிரபஞ்சத்தின் மூல காரணமும் பருப்பொருளேயாகும், முக்குணங்கள் சமநிலையை இழக்கும் போது ஆதி இயற்கை உருவாகுகிறது). இதனால் இதை சாங்கியதின் உப தரிசனம் என்றும் அழைப்பார்கள்.  முக்குணங்களில் பிளவு உண்டானதால்(சம நிலை இழந்ததால்) ஆதி இயற்கை(பிரபஞ்சம்) தோன்றியது. பிளவுபடாத(சமநிலையில் உள்ள) ஆதி இயற்கையை எப்படி நம்மால் அறிய முடியும் ? என்ற கேள்விக்கு சாங்கியம் பதில் அளிக்க முயன்ற போதுதான் யோகம் என்னும் தரிசனம் உருவாகியது.  நமது மனமானது காமம், குரோதம் மற்றும் மோகம் என்னும் தீய குணங்களால் மூடப்பட்டுள்ளது. இந்த தீய குணங்களை விடுத்து யோகா முறைகளால் மனதை தூய நிலைக்கு எடுத்து சென்றால் நாம் ஆதி இயற்கையை தரிசிக்க முடியும். யோகம் என்றாலே தூய அறிதல் என்று பொருள்.  ஐம்புலன்களும் மனமும் செயலற்றிருக்க அறிவு நிலைத்து நிற...

ஷண்மதம்

Image
இந்து மதத்தில் பல வழிபாட்டு முறைகளும் சமயங்களும் இருக்கின்றன. எட்டாம் நூற்றாண்டில் (கி.பி.788-870) வாழ்ந்த ஆதி சங்கரர் இந்து மதத்தில் பரவிக்கிடந்த வழிபாட்டு முறைகளையும் நெறிமுறைகளையும் சீர்படுத்தி ஆறு சமயங்களாக தொகுத்தார். இந்த ஆறு சமயங்களே ஷண்மதம் எனப்படுகிறது. இப்போது நாம் வரையறுக்கும் இந்து மதம் என்பதும் கூட சங்கரரின் ஆறு சமயங்களின் தொகுப்பே ஆகும். பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றே மற்றவை எல்லாம் மாயை என்ற அத்வைத தத்துவத்தை தொகுத்தவர் சங்கரர். அத்வைதியான ஆதி சங்கரர் தான் நிறுவிய அத்வைத தத்துவத்தையும் மற்றும் சமய கொள்கைகளையும் பரப்ப பாரத தேசம் முழுவதும் மடங்களை நிறுவினார். அவர் வகுத்த ஷண்மதங்கள் முறையே  சைவம் வைணவம் காணபத்தியம் கௌமாரம் சௌரம் சாக்தம் எனப்படுகிறது. பிற்காலத்தில் இதில் சைவமும் வைணவமும் பிற சமயங்களை விழுங்கிவிட்டன(அல்லது இணைத்து கொண்டன). அதில் சௌரம் வைணவத்துடனும் கௌமாரம், காணபத்தியம், சாக்தம் போன்ற சமயங்கள் சைவத்துடனும் சேர்ந்துவிட்டது. சைவம் சிவபெருமானை முழுமுதற்கடவுளாக எண்ணி வழிபடுவது. இப்படி வழிபடுபவர்கள் சைவர்கள் என அழைக்கப்பட்டனர். இதற்குள் பல சைவ உட்ப்ப...

சாங்கியம் | ஆதி இயற்கை வாதம்

Image
இந்து ஞான தரிசனங்கள் ஆன்மிக  தத்துவங்களையும் சரிபாதி பௌதிக  தத்துவங்களையும் கொண்டவையாகும்.  இந்து ஞான தரிசனங்களில் முதன்மையானதாகவும் காலத்தால் முற்பட்டதாகவும் கருதப்படுவது சாங்கியமாகும். இது முழுக்க முழுக்க பௌதிக(Materialism) அடிப்படையிலான  தரிசனமாகும். இந்த தரிசனமானது கபிலரால் தொகுக்கப்பட்டது மற்றும் இதன் காலகட்டம் உபநிஷ காலகட்டத்தை சார்ந்தது. இது ஆதி இயற்கை வாதம் அல்லது சடவாத தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் சாங்கிய மரபுக்கு பின் தோன்றிய ஞான மரபுகளும், பௌத்தம் மற்றும் சமணம் போன்ற மதங்களும் மற்றும் வேதாந்தங்களும் சாங்கிய தரிசனத்தோடு விவாதித்தே தம்மை புதுப்பித்து கொண்டன. ஒவ்வரு தத்துவமும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை(அல்லது காரிய காரணத்தை) தர்க்கரீதியாக பல தளங்களில் விவாதித்து தரிசனமாக மாறுகிறது. வேதங்கள் இப்பிரபஞ்ச தோற்றத்திற்கும் இருப்பிற்கும் பிரம்மமே காரணம் என்று கூறுகிறது. ஆனால் சாங்கியம் வேதங்களின் பிரம்ம இருப்பை மறுத்து இப்பிரபஞ்சம் பருப்பொருள்களில் இருந்து தோன்றின என்று தர்க்கரீதியாக விவாதிக்கின்றன. மனிதன் அகத்துயரம், புறத்துயரம் மற்றும் இயற்கை நி...

துவைதம், அத்வைதம், விசிட்டாத்வைதம்

Image
நவீன பௌதிக தத்துவங்களுடனும்  ஆன்மிக தத்துவங்களுடனும் தர்க்கரீதியாக வாதிட்டு தம்மை புதுப்பித்து கொண்டவை வேதாந்தங்கள். நமது இந்து மரபில் வேதா காலம் முதல் தற்போது வரை அதன் தேடல் எவ்வாறு இப்பிரபஞ்சமும் அதன் உயிர்களும் தோன்றின என்பதே. அதை சாங்கியம் போன்ற பௌதிக தரிசனங்கள் பருப்பொருளில் இருந்து தோன்றின என்று முன்வைக்கின்றன மற்றும் இன்றைய big bang theory போன்ற அறிவியில் தத்துவங்கள் சிறு வெடிப்பில் இருந்து universe தோன்றின என்று கூறினாலும். பௌதிக தத்துவங்களாலும் அறிவியலாலும் விளக்கமுடியாத சில பகுதிகள் உள்ளன அவற்றை தர்க்கரீதியாக விவாதித்து ஆன்மிக தத்துவங்கள் அந்த இடத்தை நிரப்பிவிடுகின்றன.  உதாரணத்துக்கு பருப்பொருளில் இருந்து எவ்வாறு உயிர்கள் உருவாக முடியும்? பருப்பொருள் வெடித்து இப்பிரபஞ்சம் உருவாக உந்து விசையாக இருந்தது எது? அதன் ஆதிமூலம் என்ன? திட பொருளான உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு என்ன? இந்த இடத்தில் ஆன்மிக தத்துவங்கள் விளக்க முடியாத அந்த  இடைவெளியை ஆத்மா, பிரம்மம், பரமாத்மா மற்றும் பரம்பொருள் என்று பெயர் கொடுத்து நிரப்பிவிடுகின்றன. அதேசமயம் அவை பௌதிக வாதங்களையும் ம...

தோள் சீலைப் போராட்டம் | Upper Cloth Revolt

Image
மனித சமூகம் ஆடை உடுத்த ஆரம்பித்த தருணம் தான் நாகரிகத்தின் தொடக்கம் என்று கருதப்படுகிறது. அந்த ஆடை தான் மனிதனை தரத்திலும் தகுதியிலும் உயர்த்தியோ தாழ்த்தியோ காட்டுகிறது. அந்த ஆடை அணியும் விஷயத்தில் இடுப்புக்கு மேல் ஆடை அணிய கூடாது என்று இப்போதுள்ள கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் ஒடுக்கப்பட்டனர். குறிப்பாக பெண்களுக்கு தங்களின் மார்பகங்களை மறைப்பது உயர் சாதியினருக்கு மரியாதை கொடுக்காமல் அவமதிப்பதாக கருதப்பட்டது. இதனால் பெண்களுக்கு மேல் ஆடை அணியவும்  மற்றும் மார்பகத்தை மறைக்கவும் உரிமை மறுக்கப்பட்டது.  கிபி 19 ம் நூற்றாண்டில் திருவாங்கூரில் ஆட்சி அதிகாதாரத்தில் அங்கம் வகித்த நம்பூதிரிகள், வெள்ளாளர்கள் மற்றம் நாயர்கள் உயர்வாகவும், தோற்றவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்று ரீதியில் கிபி 18 ல் மார்த்தாண்ட வர்மாவின் தளபதியாக இருந்த அனந்த பத்மநாப நாடாருக்கு அடுத்து நாடார் சமூகம் ஒடுக்கப்பட்டு நான்காம் நிலைக்கு தள்ளப்பட்டது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு மேல் ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. நாடார், ...