இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
இந்து ஞான மரபு என்பது வெறும் இறை வழிபாட்டையும் சடங்குகளையும் மட்டும் கொண்டதல்ல அவை பல தத்துவங்களையும் தரிசங்களையும் உள்ளடக்கியவை. நமது இந்து மரபில் வேதா காலம் முதல் தற்போது வரை அதன் தேடல் எவ்வாறு இப்பிரபஞ்சமும் அதன் உயிர்களும் தோன்றின என்பதே. இப்பிரபஞ்ச தோற்றத்தை வகுத்துக்கொள்ள பல தத்துவங்கள் உருவாகின, அந்த தத்துவங்கள் விரிவடைந்து தரிசனங்களா மாறின, தரிசனங்கள் ஒரு எல்லையில் இறைவழிபாடாக மாறி மதங்களானது. இப்படி இந்திய ஞான மரபில் உருவான மதங்கள்தான் ஷண்மதம், சமணம் மற்றும் பௌத்தமாகும். முதலில் தத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் உருவாகுகின்ற தர்க்களின் தொகுப்பாகும். தர்க்கரீதியாலான சிந்தனைகளின் தொகுப்பே தத்துவமாகும். ஒரு தத்துவ சிந்தனையில் உருவான கருத்து சித்தாந்தமாக விரிவடைந்து, பிற அறிவு துறைகளில் உள்ளவற்றையும் விளக்க முற்படுவதே தரிசனமாகும். இந்த தரிசனங்கள் இந்து மெய் ஞானங்களின் வரிசையேயாகும். இந்து ஞான மரபு என்பது தரிசனங்கள் தனது கற்பனை மற்றும் உள்ளுணர்வால் விரிவடைந்து இறை வழிபாடாக மாறும்போது மதங்களா உருவாகுகின்றன. அப்படி இந்து ஞான மரபில் உதித்தவை சைவம், வைணவம், சாக்தே...