ஆதிசங்கரரின் அத்வைதம்
கடவுளும் அணைத்து உயிரினங்களும் சமம் என்ற வகையில் கடவுளிடம் சாமானியனை நெருக்கமாக கொண்டு சேர்த்த தத்துவம்தான் ஆதிசங்கரரின் அத்வைதம். சங்கரரின் காலத்தில் இந்து மரபு சமண பௌத்த தத்துவங்களின் தாக்கத்தாலும் கர்ம மார்க்கத்தின் சடங்குகளாலும் திசைமாறி சிதறுண்டது. இவ்வாறு சிதறுண்ட கிடந்த இந்து மரபை ஒருங்கிணைத்து காலத்திற்கு ஏற்ப தனது ஞான மார்க்கத்தின் மூலம் கட்டி எழுப்பியவர் சங்கரர். பௌத்ததின் உயரிய கருத்துக்களையும் வேதத்தின் ஞான காண்டத்தையும் உள்வாங்கிக்கொண்டு உருவான தத்துவமே அத்வைதமாகும். சங்கரரின் அத்வைத தத்துவம் என்பது, பிரமம்மும் ஆத்மாவும் ஒன்றே இரண்டல்ல என்பதாகும்(Non duality state). ஜீவாத்மா இந்த மாறிக்கொண்டே இருக்கும் பிரபஞ்சத்தில் உள்ளவை எல்லாம் நிலையானது என்று தான் என்ற அகந்தையில் பிரம்மத்தால் உருவான மாயையில் சிக்கிக்கொண்டு உழல்கின்றது. எப்பொது ஜீவாத்மா தன்னை தானே உணர்ந்து(self realize) தான் பிரம்மத்தின் ஒரு அங்கம் என உணர்கிறதோ அப்போதே இந்த பிரபஞ்ச மாயையில் இருந்து விடுபட்டு முக்தி(liberal) அடைகிறது. இதை இன்றைய காலகட்டத்திருக்கு ஏற்ப புரிந்துகொள்ளவேண்டும் என்றால் பிரம்ம...