கம்யூனிசம்
பொதுவுடைமை என்பது தனிச்சொத்துவுடமையை உடைத்து சமூக வளங்கள் மற்றும் உற்பத்தி ஆகியவற்றை சமமாக பங்கிட்டு கொள்வது. கம்யூனிசம் என்பது எல்லாவற்றையும் பாட்டாளி மற்றும் முதலாளி என்று வர்க்க அடிப்படையில் அணுக கூடிய சித்தாந்தம். இந்த முதலாளித்துவதில் நிலவும் வர்க்க முறைதான் பாட்டாளி vs முதலாளி. இந்த முதலாளித்துவதால் கட்டமைப்பட்ட ஜனநாயக அரசு தனி நபர் ஒருவர் மூலதனம், நிலம் மற்றும் அனைத்துவிதமான உடமைகளை வாங்க விற்க அனுமதிக்கின்றன மற்றும் இந்த முதலாளித்துவ கட்டமைப்புதான் தனிச்சொத்துடைமை என்றழைக்கப்படுகிறது. இதனால் நாட்டின் உடமைகள் அனைத்தும் ஒரு சிறு கூட்டமான முதலாளிகளிடமும் மற்றும் தனது உழைப்பை மூலதனமாக வைத்து வாழும் எந்த ஒரு இலாபமும் பெறாத ஒரு பெரும் கூட்டமாக பாட்டாளி வர்க்கம் திகழ்கிறது. இந்த பெரும் கூட்டமான பாட்டாளி வர்க்கம் தங்களை தங்களின் அடிமைமுறையில் இருந்து விடுவித்து புரட்சியின் மூலம் ஆட்சி அதிகாரத்தை பிடித்து அனைத்து உடமைகளையும் அரசுடமை ஆக்கி சமமாக பங்கிட்டு கொள்ளவதுதான் கம்யூனிசம். ஒரு சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அடிமை முறை ஆகியவை மூலதனம் மற்றும் அதன் உற்பத்...