இந்துத்துவா − வரலாற்றுப்பார்வை
இந்துமதம் பற்பல தத்துவத் தருக்கள் அடங்கிய தத்துவவனம்! தத்துவ உரையாடல்களின் வழியே தம்மைத்தாமே செதுக்கிக்கொண்டிருக்கும் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் ஞானச்சோலை, இந்துமதம்! அது தன் அறிதல்களை முதன்மையாக முன்வைப்பதாலேயே ஆயுதந்தாங்கிய மடத்தலைவர்களை இதுவரை அனுமதித்ததில்லை, இனியும் ஆதரிக்க வாய்ப்பில்லை! சமகால இந்திய மதங்களான பௌத்தம், சமணம் போன்றவற்றை அறிந்து அதனோடு உரையாடி தம்மைப் புதுப்பித்துக் கொண்ட வரலாற்றையுடையது இந்துமதம்! பழங்குடியின நாக, அசுரவேதங்களில் துளிர்த்த இந்துமதத்தின் ஞானமரபு, வேளாண்குடியினரின் நால்வேதங்களில் நிலைகொண்டு அனைத்து உயிர்களுக்குமான வேதாந்தமாகக் கனிந்து மென்மேலும் வளர்ந்து கொண்டுள்ளது! வழிபாட்டு மரபினை ஆறு தரிசனங்களாக ஆதிசங்கரர் தொகுத்தார். அவையாவன சைவம், வைணவம், சாக்தம், கணாபத்யம், கௌமாரம், சௌரம்! தத்துவ தரிசனங்களும் ஆறுமரபாகத் தொகுக்கப்பட்டுள்ளன! அவையாவன சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், உத்தரமீமாம்சை, பூர்வமீமாம்சை! இவை பல்லாயிரக்கணக்கான குருமரபுகளின் மூலமாக பல்லாரயிமாண்டுகளாாக உரையாடலின் மூலம் தொகுக்கப்பட்ட ஞானக்களஞ்சியம்! இந்துமத்தின் தத...