வேதாந்தம் | உத்தரமீமாம்சம்

வேதத்தின் அந்தம்தாம் தான் வேதாந்தமாகும். அதாவுது வேதத்தின் இறுதியில் வருவது என்று பொருள். இந்து மத அனைத்து சமய வழிபாடுகளிலும் வேதாந்தத்தின் தத்துவார்த்தம் காணப்படும். வேதாந்தத்தின் முக்கிய தேடல் இப்பிரபஞ்ச தோற்றம் மற்றும் இயக்கத்திற்கு முக்கிய மூல காரணமாக இருக்கும் பிரம்மத்தை பற்றியதேயாகும். வேதாந்தங்கள் உபநிஷங்கள் மற்றும் பிற பௌதிக தத்துவ தரிசங்களுடன் விவாதித்து தம்மை வளர்த்து கொண்டவை.

இத்தரிசனம் வேதங்களை ஏற்று கொண்டாலும் அதில் உள்ள சடங்குகளை ஏற்பதில்லை. பிரம்மத்தை பற்றி அறிய ஞான தேடலையே வேதாந்தங்கள் முன்வைக்கின்றன. அதனால் இதை பிரம்ம மீமாம்சை அல்லது ஞான மீமாம்சை என்று குறிப்பிடுவார்கள். வேதாந்த மரபினை தொகுத்தவர் குரு பாதராயணர் ஆவர் மற்றும் இவர் கிமு நான்காம் நூற்றாண்டுக்கும் கிமு இரண்டாம் நூற்றாண்டுக்கும் நடுவில் வாழ்ந்தவர் என்று நம்பப்படுகிறது. இவருடைய பிரம்மசூத்திரங்கள் என்ற நூலே வேதாந்தத்தின் முக்கிய நூலாகும். வேத வியாசர்தான் வேதாந்தத்தின் முதல் குரு என்ற நம்பிக்கையும் உண்டு.

இந்து மரபில் வேதா காலம் முதல் தற்போது வரை அதன் தேடல் எவ்வாறு இப்பிரபஞ்சமும் அதன் உயிர்களும் தோன்றின என்பதே. அதை சாங்கியம் போன்ற பௌதிக தரிசனங்கள் பருப்பொருளில் இருந்து தோன்றின என்று முன்வைக்கின்றன மற்றும் இன்றைய big bang theory போன்ற அறிவியில் தத்துவங்கள் சிறு வெடிப்பில் இருந்து universe தோன்றின என்று கூறினாலும். பௌதிக தத்துவங்களாலும் அறிவியலாலும் விளக்கமுடியாத சில பகுதிகள் உள்ளன அவற்றை தர்க்கரீதியாக விவாதித்து ஆன்மிக தத்துவங்கள்(வேதாந்தங்கள்) அந்த இடத்தை நிரப்பிவிடுகின்றன. 

உதாரணத்துக்கு பருப்பொருளில் இருந்து எவ்வாறு உயிர்கள் உருவாக முடியும்? பருப்பொருள் வெடித்து இப்பிரபஞ்சம் உருவாக உந்து விசையாக இருந்தது எது? அதன் ஆதிமூலம் என்ன? திட பொருளான உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு என்ன? இந்த இடத்தில் வேதாந்த தத்துவங்கள் விளக்க முடியாத அந்த  இடைவெளியை ஆத்மா, பிரம்மம், பரமாத்மா மற்றும் பரம்பொருள் என்று பெயர் கொடுத்து நிரப்பிவிடுகின்றன. அதேசமயம் அவை பௌதிக வாதங்களையும் முழுமையாக மறுப்பதும்மில்லை. வேதாந்தங்கள் சாங்கியம், யோகம், வைசேஷிகம் மற்றும் நியாயம் போன்ற பௌதிக வாதங்களுடனும் விவாதித்தும் பிரம்மத்தை உபநிஷங்களிடம் விவாதித்தும் புதுப்பித்துக்கொண்டவை.

பௌத்த சமண மதங்களுடன் ஆழமான விவாதத்தில் ஈடுபட்டதான் விளைவாக பிற்கால வேதாந்தங்கள் உருவாகின. முதலில் உருவானது ஆதி சங்கரரின் அத்வைதமாகும். இதிலிருந்து பிரிந்து உருவானவை விசிஷ்டாத்வைதம் மற்றும் துவைதம் ஆகும்.

மானுட சமத்துவத்திற்கும், விடுதலைக்கும், பொது நீதிக்கும் போராடிய விவேகானந்தர், நாராயண குரு, அய்யா வைகுண்டர், சட்டம்பி ஸ்வாமிகள், சகஜானந்தர் போன்ற துறவிகள் வேதாந்திகளே மற்றும் அவர்கள் பெற்ற சமூக விடுதலைக்கான சிந்தனைகள் வேதாந்தங்களில் இருந்தேயாகும்.

பரமாத்வாவும் ஜீவாத்மாவும் ஒன்றே என்ற அத்வைத கோட்பாடே உலகில் உள்ள அனைத்து உயிர்களும்(அவற்றுடன் கடவுளும்) சமம் என்னும் சமூக சமத்துவத்தை விதைக்கும் முதல் சிந்தனையாகும்.

Comments

Popular posts from this blog

அத்வைத வேதாந்தமும் செயற்கை நுண்ணறிவும்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

ஆதிசங்கரரின் அத்வைதம்